பெண்கள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி சேவை 181; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார் - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 10, 2018

பெண்கள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி சேவை 181; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

பெண்கள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி சேவை 181; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்....

பெண்கள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி சேவை
181; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை:

டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரத்துக்கு பலியானது நாட்டையே உலுக்கியது. இதையடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவிப்பதற்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த சேவை டெல்லி, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் 181 சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்காக சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்து உள்ளார்.  இதனை அடுத்து இந்த மையம் இன்று முதல் செயல்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1.முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கூட்டுறவு வங்கிகளின் சார்பில் ரூ.6 கோடி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது
முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கூட்டுறவு வங்கிகளின் சார்பில் ரூ.6 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.
2.மேகதாது அணை விவகாரம்; அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல் அமைச்சர் நாளை ஆலோசனை
மேகதாது அணை விவகாரம் பற்றி அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் நாளை மாலை ஆலோசனை நடத்துகின்றனர்.
3.14-ந் தேதி சேலத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
சேலத்துக்கு 14-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
டெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை என சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
5.பேஸ்புக் பக்கமும் பெண்களின் பாதுகாப்பும்
இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது.


No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...