Beauty Tips - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 8, 2018

Beauty Tips

பளிச் முகத்துக்கு 10 டிப்ஸ்!

முல்தானி மெட்டி பவுடருடன் தயிர், சிறிது பன்னீர் கலந்து ஃபேஸ்பேக் மாதிரி அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால், முகம் டால் அடிப்பது உறுதி.

பளிச் முகத்துக்கு 10 டிப்ஸ்! #BeautyTips

கோடை வெயிலினால் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும். இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்காகப் பயன்படுத்தும் சன்ஸ்க்ரீன், லோஷன் போன்ற காஸ்மெட்டிக் விஷயங்கள்  சில நேரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். எனவே, இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களால், வீட்டிலேயே எளிய முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் டிப்ஸ்களை வழங்குகிறார். அழகுக்கலை நிபுணர் முத்துலட்சுமி.

''கோடைக் காலத்தில், வெயிலின் தாக்கம் காரணமாகச் சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிக்கும். இதனால், சருமம் கறுத்துவிடும். இதைத் தவிர்க்க, பியூட்டி பார்லருக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதும். எப்போதும் பிரெஷ்ஷாக இருக்கலாம்.

சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்தக் கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. மேலும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.
ஜாதிகாய்த்தூளுடன் சந்தனத்தூளைச் சம அளவில் எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள்தூள் கலந்து முகத்தில் பேஸ் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படித் தொடர்ந்து செய்தாலும் கரும்புள்ளி காணாமல்போகும்.

சில பெண்களுக்கு முகம் பளிச்சிட்டாலும் கண்கள் சோர்வடைந்து காணப்படும். இது அவர்களின் முக அழகைக் கெடுக்கும். எனவே, கண்களைப் புத்துணர்வுடன் வைத்திருக்க, ஒரு வெண்தாமரையின் இதழ்களை 10 மில்லி விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதை, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைக் கண்கள் மீது தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் கிடைக்கும். மேலும், விளக்கெண்ணெய்யைப் பயன்படுத்தி, வலதுபுறத்திலிருந்து இடதுபுறம், இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் என கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்தாலும், கண்கள் கோலிக்குண்டாக மிளிர்ந்து கூடுதல் அழகைத் தரும்.

கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.

முல்தானி மெட்டி பவுடருடன் தயிர், சிறிது பன்னீர் கலந்து ஃபேஸ்பேக் மாதிரி அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால், முகம் டால் அடிப்பது உறுதி.

வேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றின் கலவையை முகத்தில் பூசிக்கொண்டால், பளிச்சென இருக்கும். 4 பாதாம்பருப்பு அரைத்த விழுதுடன், தேன் மற்றும் பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து பூசுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். இது, முகத்துக்கு புரோட்டின் தன்மையை அளித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

முகஅழகு

வாழைப்பழக் கூழுடன் பட்டர் ஃப்ரூட் கலந்து, சருமத்தில் பூசுங்கள். சற்று நேரம் ஊறவிட்டுக் கழுவிவிடுங்கள். சருமம் வறட்சி தன்மை நீங்கி மிருதுவாகும்.

முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க, அவகாடோ பழத்தைத் தோல் நீக்கி, மிக்ஸியில் அடித்துக்கொள்ளுங்கள். முகத்தை நன்கு கழுவிய பிறகு அந்த அவகாடோ பேஸ்ட்டை முகம் முழுக்க பரவலாகப் பூசுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை இதைச் செய்துவந்தால், முகச்சுருக்கம் நீங்கி இளமையான தோற்றம் பெறலாம்.

நுங்கின் சதைப்பகுதியுடன்,ரோஸ் வாட்டர், முல்தானிமெட்டி கலந்து முகத்தில் பேக் போட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகம் கழுவினால்,முகம் பளிச்சென்று இருக்கும்.


 

 

No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...